Header Ads

Breaking News
recent

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு அருகிலுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சையளிக்கப்படும்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,

கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவரது குடும்பம் ஆகியன எதிர்நோக்கும் உளரீதியான அழுத்தங்களை மையப்படுத்தியெ இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதிக ஊழியர்கள் உள்ள சிகிச்சை நிலையங்களில் இருந்து வேறு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அவர்களை இடமாற்றம் செய்யவும் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இரண்டாவது முறை செலுத்துவதற்கான தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்,
Powered by Blogger.