நோன்பு பெருநாள் தினத்தன்று பள்ளிவாசல் களை மூடுவதற்கு வக்பு சபை தீர்மானம் : வீடுகளில் பெருநாள் தொழுகையினை தொழுது கொள்ளுமாறு வேண்டுகோள்

நோன்பு பெருநாள் தினத்தன்று பள்ளிவாசல்களை மூடுவதற்கு வக்பு சபை தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினத்தில் முஸ்லிம் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து தொழுகைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வேகமாக பரவும் கோவிட் 19 கொரோனா தொற்று காரணமாக வணக்கஸ்தலலங்களில் கூட்டுச்சேயட்பாடுகளை தவிர்க்கும் சுகாதார வழிக்கட்டலுக்கமைய எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளை எந்த ஒரு பள்ளிகளிலும் நடத்தாமல் வீடுகளில் பெருநாள் தொழுகையை மேட்கொள்ளவும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது