இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!!

நாட்டில் இறுதியாக 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக மரணித்தவர்களில் 7 ஆண்களும் 2 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கெப்பிடிக்கொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயதுடைய ஆண்ணொருவரும்,
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண்ணொருவரும்
லெவல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண்ணொருவரும்
தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவரும்
மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்ணொருவரும்,
மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய ஆண்ணொருவரும்
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண்ணொருவரும்
வரகாம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண்ணொருவரும்
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.