சற்றுமுன் மன்னார் பண்ணைவெட்டுவான் பகுதியில் மடு பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை..!

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் பண்ணைவெட்டுவான் பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லுரிக்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையை நோக்கி சென்று கொண்டிருந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தானது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் மூலம் அறியமுடிகின்றது.
அதனைத்தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரி மடுவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்பொழுது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவல் தெரிவிக்கின்றன.
