Header Ads

Breaking News
recent

யாழில் சொகுசு வாகனத்திற்குள் சிக்கியவை!


சொகுசு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மருதனார்மட பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், சுன்னாகம் மருதனாமடத்தில் வைத்து சொகுசு வாகனமொன்று வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதில், இரகசியமாக கடத்திச் செல்லப்பட்ட 240 சாராய போத்தல்கள் மீட்கப்பட்டன. வாகனத்தையும் பொலிசார் கைப்பற்றினர்.

வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சான்று பொருட்களும், சாரதியும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தாக மதுவரிதினைக்களகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படும்.
Powered by Blogger.