Header Ads

Breaking News
recent

இன்று நாடளாவிய ரீதியில் தற்கலிக பயணக்கட்டுப்பாடு தளர்ந்தது : இன்று நடைமுறையில் உள்ள முக்கிய விடயங்கள் எவை?



கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடளாவியய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டன.

பொதுமக்கள் இன்று இரவு 11 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க முடியும்.

பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். மீண்டும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் தளர்த்தப்படும்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாட்களில் வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்ல முடியும், அதே நேரத்தில் அவர்கள் அருகிலுள்ள கடைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று வீதிகளில் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும். சில்லறை கடைகள், பேக்கரிகள் மற்றும் மருந்தகங்கள் இன்று திறக்க அனுமதிக்கப்படும், மற்ற எல்லா கடைகளும் மூடப்படும்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது என்று பொலிசார் தெரிவித்தனர். ஜூன் 7 ஆம் திகதி வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்.

கூடுதல் பொலிசார் இன்று வீதித் தடுப்புகளில் நிறுத்தப்படுவார்கள்.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க அமைப்பு, பயணக்கட்டுப்பாடு தளர்வில் அமுலில் இருக்காது. எனினும், பொதுமக்கள் அடையாள அட்டையை தம்முடன் எடுத்துச் செல்ல பொலிசார் அறிவுறுத்தினர்.
Powered by Blogger.