கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை!!!

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தரபவன் முதலிடம் பெற்றுள்ளார்.
அத்துடன் கலைப்பிரிவில் ப்ரிஸ்படேரியன் மகளிர் கல்லூரி மாணவி சாமல்கா செவ்மினி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.