Header Ads

Breaking News
recent

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து எப்போது ஆரம்பமாகும்?


மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தனக்கு கொவிட் செயலணியின் தலைவர் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பொது போக்குவரத்துக்களை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
Powered by Blogger.