திருகோணமலை-கந்தளாய் பிரதேசத்தில் எரிபொருள் விலையை உடனே குறை என கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கந்தளாய் பிரதேசத்தில் எரிபொருள் விலையை உடனே குறை என கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இன்று (22) காலை இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கந்தளாய் பிரதேச செயலகத்திறகு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு நடை பாதையாக சென்று பொதுச் சந்தைக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடகம் வேண்டாம் எரிபொருள் விலையை உடனே குறை என்ற கோசங்களை எழுப்பி அதாவது கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுமீ குறிப்பிடத்தக்கது.