கேஸ் விலையை அதிகரிக்க அனுமதி இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர்: கெஹெலிய

சமையல் எரிவாயு (கேஸ்) விலையை அதிகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டுப் பாவனைக்கான எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு லிற்ரோ எரிவாயு கம்பனி மற்றும் லாஃப் எரிவாயு கம்பனி தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்வதற்கான பரிந்துரையை அமைச்சரவை உபகுழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.