வாசுதேவ நாணயக்காரவுக்கு மாரடைப்பு-வைத்தியசாலையில் அனுமதி!

நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் இன்று காலை சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அவருக்கு ஸ்டென்ட் (stent operation) என்ற சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.