மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார் சஜித்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இவர்கள் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்தனர்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இவர்கள் இருவரும் இன்று காலை கொழும்பு கங்காராமய விஹாரைக்கு சென்று ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.