தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரி,மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

சிறைச்சாலைகளில் உள்ள மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதைப் போன்று தங்களுக்கும் விடுதலை வழங்கவேண்டுமெனவும் அல்லது மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரி இவ்வாறு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.