நாளை அதிகாலை முதல் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு…!

நாடளாவிய ரீதியில் மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, மொனராகலை, அம்பாறை, மாத்தளை, கண்டி, மட்டக்களப்பு, காலியில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன
