பொதி சேவை ஊடாக அனுப்பப்பட்டிருந்த 4 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா...
சொகுசு கதிரையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா ரக போதைப் பொருள் (குஷ்) சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு போலியான முகவரிக்கு பொதி சேவை ஊடாக அனுப்பப்பட்டிருந்த போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
கடித உறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிகளவான போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அந்தத் தொகை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.