தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம் இன்று

கொவிட் பரவலை தடுக்கும் விஷேட குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் பரவலை தடுப்பதற்கான தீர்மானங்கள் எடுப்பதற்காக இன்று (27) மாலை குறித்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.