மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பு...!
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது
இன்று (25) காலை மட்டக்களப்பு முகத்துவாரம் மீன் சந்தையில் மக்களின் கவலையீனமான நடவடிக்கை.
கொரொனா காலப்பகுதியில் அதுவும்
பொது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் இவ்வாறான அசமந்தபோக்கினால் மீண்டும் COVID-19 கொத்தணிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே ஊரடங்குச் சட்டத்தின் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கிப் பொதுமக்களை வீதிக்கு வராமல் வைக்க பல்வேறு தீர்மானங்களை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் .

