மின்னல் தாக்கி வீட்டின் கூரை மேல் தென்னை மரம் விழுந்ததில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி....
(அப்துல்சலாம் யாசீம்)திருகோணமலை கொமரங்கடவால பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பனா குளம் பகுதியில் மின்னல் தாக்கி வீடொன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இச்சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது
மேலும் நேற்றையதினம் பெய்துவந்த அடை மழை காரணமாக மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று கூரைமேல் விழுந்தாகவும் வீடு பகுதியளவில் சேதமடைந்திருப்பதக்கவும் தெரிவவிக்கப்படுகின்றது
இதன்போது வீட்டில் இருந்த இருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்றப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது.


