திருமலையில் கரை வலையில் பிடிபட்ட 3000 கிலோ கிராம் பாறை மீன்கள்...
திருகோணமலை கோட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3000 கிலோ கிராமிட்க்கும் அதிகமான பறை மீன்கள் பிடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (01) திருகோணமலை கோட்பே கடற்கரை பிரதேசத்தில் ஜெயா பேபி என்பவரின் கரைவலையிலேயே இவ்வாறு பாறை மீன்கள் பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
நாட்டில் ஏட்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவித்துள்ள நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கே இவ்வாறு கரைவலையில் 3000 கிலோ கிராம் பாறை மீன்கள் பிடிபட்டுள்ளது
இவ்வாறு பிடிபட்ட பாறை மீன்களின் பெறுமதி சுமார் ரூபா 15 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.