Header Ads

Breaking News
recent

வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் விபத்து : தந்தையும் மகனும் மயிரிழையில் உயிர்தப்பினர்...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பாரதிபுரம் பிரதேசத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் பாலம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தந்தை மற்றும் மகன் இருவரும் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்று (23) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்

மூதூர் கல்குவாரியில் இருந்து சேருநுவர பிரதேசத்தை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதகவும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் டிப்பர் வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் மகன் இருவரும் சிறு காயங்களுடன் பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மூதூர் பொலிசார் தெரிவித்தனர்

மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.