மக்களின் உரிமைகளை பறிக்க அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தப்படுகின்றனர் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச...
மக்களின் உரிமைகளை பறிக்க அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போராட்டத்தை தடுக்க நாடு முழுவதும் வீதித் தடைகள் போடப்பட்டு வருகிறது. மக்கள் பஸ்களில் இருந்து இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் மற்றும் அவர்களின் பெயர்கள் பொலிஸ் அதிகாரிகளால் பட்டியலிடப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
பஸ் சாரதிகளின் பாதை அனுமதிப்பத்திரம் நிறுத்தப்படும் என பொலிஸ் அதிகாரிகளால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த போது அணிவகுப்புக்கு அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் , எதிர்க்கட்சி தலைவரிடம் தங்கள் கவலைகளை தெரிவிக்க மக்களுக்கு உரிமை இல்லையா என பிரதமரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டிலுள்ள மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைப் பற்றி பேச உரிமை இருக்க வேண்டும். இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள கருத்து சுதந்திரத்திற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களாக தமது வழமையான கடமைகளில் ஈடுபடாமல், ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு எதிராக உத்தரவுகளை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கைகளை நிராகரித்தன. மேலும் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் மற்றும் அவர்களின் கவலைகளை எழுப்பும் உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த மக்களுக்கு உரிமை உண்டு. ஜனநாயக நாடு என்ற வகையில் நாட்டிற்குள்ளேயே எமது பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். வெளி மத்தியஸ்தர்களை நாட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.