முல்லைத்தீவு கடலில் பாரிய அலையில் சிக்கி மூவர் கடலில் மூழ்கியுள்ளனர்
இதுவரை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரின் சடலங்கள் தேடப்பட்டுவருகின்றன .
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்ததாக கருதப்படும் இவர்கள் ஏரல் எடுத்துக்கொண்டிருக்கும்போது பாரிய அலையில் சிக்கி மூழ்கியுள்ளனர்
குறித்த சம்பவம் இடம்பெற்றவுடன் கடலில் மூழ்கிய ஒருவரின் மகள் அருகில் நின்றவர்களிடம் தெரிவித்தும் உடனடியாக அவர்களை காப்பாற்ற முடியவில்லையென அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.