Header Ads

Breaking News
recent

கவிஞர் மஷுறாவின் 'நதிகளின் தேசிய கீதம்' நூல் வெளியீட்டு விழா...

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சம்மாந்துறை பிரபல கவிஞர் மஷுறா எழுதிய 'நதிகளின் தேசிய கீதம்' கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா மருதமுனை கமு/ அல் - ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் இடம்பெற்றது.


தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முதன்மைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


நிகழ்வில், வரவேற்புரையை கவிஞர் எம்.ஐ.அச்சி முஹம்மத் நிகழ்த்தியதோடு, தலைமை உரையை எம்.எம். நௌஷாத், பிரதி மீதான நயவுரையை, பேராசிரியர் செ. யோகராஜா, பிரதி மீதான நுண் பார்வையை சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.


நிகழ்வில் ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





Powered by Blogger.