பாடசாலை தளபாடங்கள் இன்றி அவதியுறும் மாணவர்கள்...
திருகோணமலை மாவட்ட குச்சவெளி தி/அந்நூரி மு.ம.வி. பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் தரம் 7,8, போன்ற வகுப்பு மாணவர்கள் சிறிய மேசை ,கதிரைகளையே உபயோகித்து வருகின்றனர் இதனால் கற்றல் நடவடிக்கைகளின் போது பல அசௌகரியங்களை எதிர் நோக்குவது மற்றுமன்றி உடல் உபாதைகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றார்கள் விசனம் தெரிவித்துள்ளனர்..குறித்த பாடசாலை அதிபரை நாம் தொலைபேசியில் தொடர்பு கொன்டு கேட்டபோது தாம் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுத்து மூலமான முறைப்பாட்டை முன் வைத்திருப்பதாகவும் ...சுமார் ஒரு வருடங்களாக பதில் எதுவும் தமக்குக் கிடைக்க வில்லை எனவும் தெரிவித்தார்...இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா????
இதனை பகிர்வதன் மூலம் பிரச்சிணைக்கு தீர்வு கிடைக்கலாம் அல்லவா???