Header Ads

Breaking News
recent

பெண்மை போற்று..!

 


வரிகள் - வசந்தன் 

மூச்சடக்கி

முத்தமிட்டு


மார்பை கசக்கி 

எச்சில் பட்டு 


ஊடல் பிடியில்

தொப்புள் தொட்டு


உசுப்பும் கடியில்

முனகல் இட்டு


யோனி நுழைத்து

இன்பம் கொண்டு


கசியும் திரவம்

பிசிறியடித்து


நீட்டி நிமிர்ந்து

அயர்ந்து உறங்கினால்


முடிந்து போகும்

ஆணின் மோகம் ஆனால்..


உன் உணர்வு கடியில்

உதடு வலித்து


முரட்டு பிடியில்

மார்பு வலித்து


உருட்டும் அசைவில்

வயிறு வலித்து


சொருகும் அதிர்வில்

கருப்பை வலித்து


சுமக்கும் கனத்தில்

உடல் வலித்து 


உணரும் வலியை 

வெளியே சொல்லாமல்


வேண்டும் நேரமெல்லாம்

உடல்பசிக்கு விருந்தாகி


புணரும் சலுகையாக

பிள்ளை வலியும் பெறுக்கிறாளே


அவளுக்காக என்ன 

செய்ய இயலும் உன்னால்..


வேறொன்றும் செய்யாதே

பெண்ணும் உயிரென்று மதி..


உயிர் கொண்டு நேசி......

உள்ளார்ந்து யாசி...


பெண்மையை கையாளும்

மென்மை உனக்கே புரிந்துவிடும்


பெண் என்பவள் பூவானவள்

அதை கசக்கி எறிந்து விடாதே


அதை நுகர்ந்துவிட்டு

அரவணைத்துக்கொள்


தேவதையாக

இருப்பாள் அவள்

உன் மனதில் 

Powered by Blogger.