Header Ads

Breaking News
recent

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விற்பனைக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்...

அஹமட் லெப்பை ஜுனைதீன்
''திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், தேசிய வளங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்கின்ற உடன்படிக்கையை சுருட்டிக்கொள்'' என்ற வாசகத்தினை தாக்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது.

இவ் சுவரொட்டிகள் கண்டி வீதி, நூலக வீதி, மன்னார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, புகையிரத நிலைய வீதி என வவுனியா நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Powered by Blogger.