கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 31ம் திகதி இரவு கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 21ம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.