கொழும்பு திருமலை அதிசொகுசு பயணிகள் பேருந்து விபத்து...
இவ்விபத்து இன்று (26)அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் கலேவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் இதில் காயம் அடைந்த 8 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து தொடர்பிலான விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.