அச்சுவேலியில் டீசலை பெற வந்த முதியவர் #பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்தார்!!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்ற முதியவர் முன்னோக்கி நகர்த்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் வயது (70வயது) என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழைய முற்பட்ட முதியவரை டீசல் பெறுவதற்கு காத்துநின்ற பாரவூர்தி நகர்ந்ததால் முதியவர் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்...