Header Ads

Breaking News
recent

அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கிய பல்கலை மாணவர்கள்!


பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தனது ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு முடிவெடுப்பதற்கு கால அவகாசம் வழங்கி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குள் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
Powered by Blogger.