ராஜபக்ச அரசாங்கம் உட்பட பொலிஸ் மா அதிபரும் விசாரிக்கப்படல் வேண்டும் : ஜனாதிபதி கோட்டாபாய ராஜினாமா செய்ய வேண்டும் - சஜித்

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அவர்களின் வன்முறை மற்றும் அடக்குமுறையினால் நாடு சீரழிந்துள்ளதாகவும், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அன்மைய நாட்களில் அரச அனுசரணையுடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்
இந்த நிலைமைக்கு பொலிஸ் மா அதிபரும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்