Header Ads

Breaking News
recent

இந்தியாவின் "செந்தமிழ்ச்சுடர் கலைஞர் விருது" பெற்றார் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த யூ.எல்.யூ . மஜினா



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 03ஆம் திகதியை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை மற்றும் சேலம் அக்ஷ்ய் டிரஸ்ட் ஆகிய 4 அமைப்புகள் இணைந்து நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான 'முத்தமிழ் கலைஞர் பெருந்சுடர் விருதுகள் - 2022' வழங்கும் நிகழ்வில் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மாவடிப்பள்ளி எனும் ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் உமறு லெவ்வை உம்மு மஜினா "செந்தமிழ்ச் சுடர் கலைஞர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Powered by Blogger.