ஐ.ஓ.சி நிறுவனம் பெட்ரோல் விநியோகத்தில் கட்டுப்பாடு...
நேற்று முதல் ஐ.ஓ.சி நிறுவனம் பெட்ரோல் வினியோகத்தை குறிப்பிட்ட கட்டுப்பாடின்றி விநியோகித்து வந்த நிலையில் இன்று முதல் அமுலாகும் வகையில் பெட்ரோல் வினியோகிக்கும் விதம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில்
மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபா , ஓட்டோக்களுக்கு 2500 ரூபா , கார்களுக்கு 7000 ரூபா என்ற அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியொகிக்க லங்கா ஐ.ஓ.சி தீர்மானித்துள்ளது.
மேலும் சிப்பெட்கோ நிறுவனம் தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவது முற்றாக தடை செய்துள்ள நிலையில் ஐ.ஓ.சீ. நிறுவனம் அவ்வாறு எந்த ஒரு நிபந்தனையும் வழங்கப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
