க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டற் கருத்தரங்கு
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத்தோற்றிய திருகோணமலை முள்ளிப்பொத்தானை கோட்ட மாணவர்களுக்கான
"க.பொ.த உயர்தர கற்கை தெரிவு மற்றும் தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்கு" முள்ளிப்பொத்தானை பிரதேச சபை கேட்போர்கூடத்தில் இன்று புதன் கிழமை(15) இடம்பெற்றது.
இக் கருத்தரங்கு கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவினால்
அல் ஹிதுமதுல் உம்மா நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் அசங்க, அல் ஹிஜ்ரா கல்லூரி அதிபர் மஹ்ரூப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




