எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப்பஞ்சத்துக்கு ரணிலால் முடியாவிட்டால் என்னிடம் தீர்வுண்டு - ரத்ன தேரர்
ஊடகவியலாளர் முஹம்மது பாரீஸ்
நாடு எதிர்கொள்ளும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வு தன்னிடமுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் தெரிவிக்கிறார்.
இந்த நெருக்கடியான பிரச்சினைக்கு
இதுவரை எவராலும் தீர்வு காண முடியவில்லை தற்போதைய ஜனாதிபதிக்கு இப்பிரச்சினைக்குத் தீர்வு
காண முடியுமா? முடியாதா? என்பதை இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கிப்பார்க்க வேண்டும்.
அவராலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால் இப்பிரச்சினைகளுக்கு நான் தீர்வு காண்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
