சமுர்த்தி பயனாளிகள் சுமார் 23 லட்சம் பேர்களுக்கு ரூபா 5000 கொடுப்பனவு !!
கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கும் ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பஷீல் ராஜபக்ஷவின் செயற்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகள் சுமார் 23 லட்சம் பேர்களுக்கு ரூபா 5000 கொடுப்பனவு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் செவ்வாயன்று
சுமார் 3 லட்சம் பேர்களுக்கும் பின்னர் அடுத்த புதனன்று ஏனையோர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.