ஹொரவப்பொத்தானை நகரில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு
(அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தான நகர்ப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களை மூடுமாறு ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் ரத்தினேஸ்வரன் செந்தில் தெரிவித்தார்.
நாட்டில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் ஹொரவ்பொத்தான நகர்ப்பகுதியில் வர்த்தக நிலையங்களில் அதிகளவில் அக்குறனை பகுதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதாலும் அக்குறனை பிரதேசத்தில் இணங்காணப்பட்டவருடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் இணங்காணப்பட்ட நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி. மற்றும் அரச அலுவலகங்களை மாத்திரம் திறக்கப்படவுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்
பிரதேச செயலாளர் 0777531769

