Header Ads

Breaking News
recent

மூதூர் முஸ்தபா முஸ்னிப் அஹமட் பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகளால் கௌரவிப்பு

மூதூரைச் சேர்ந்த முஸ்தபா முஸ்னிப் அஹமட் நேற்று (20) பாகிஸ்தானில் வைத்து Squadron Leader (4th Rank/ Major) ஆக பதவிஉயர்வு பெற்றுள்ளார்.

மூதூரில் இருந்து முதல் முதலாக சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து விமானப்படை தளத்தில் விமானப்படை அதிகாரியாக கடமையாற்றி வரும் இவர் 01 மாத விஷேட பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு இலங்கையிலிருந்து பாகிஸ்தான் செல்லும் குழுவில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு இத்தரவுயர்வு கௌரவம் பாகிஸ்தானில் வைத்து பாகிஸ்தான் விமானப்படையினால் அளிக்கப்பட்டுள்ளது.

மூதூரிலிருந்து  சேர் ஜோன் கொத்தலாவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதலாவது விமானப் படை அதிகாரி இவர் என்பது  குறிப்பிடத்தக்கது.
Copy
Powered by Blogger.