Header Ads

Breaking News
recent

மூர் வீதி JUMMA MASJID நிர்வாகத்தினரின் ஏட்பாட்டில் குடி நீர் விநியோகம் !

கடந்த சில தினங்களாக #திருகோணமலை மாவட்டத்தின் #தம்பலகாமம் #முள்ளிப்பொத்தானை #கிண்ணியா மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் அடிக்கடி நீர் துண்டிப்பு இடம்பெற்று வருகின்றது.

இன்று (20.03.2020) பிரதேச  மக்களின் குடி நீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு MOHAIDEEN JUMMA MASJID  நிருவாகத்தினர் மக்களுக்கு தேவையான நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும்.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான நீர் துண்டிப்பிட்ற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளின் கவனக்குறைவின் காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும். ஏன் சபையிடம் பயிற்றப்பட்ட அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் இல்லையா?  
நீர் குழாய்களை பொருத்துவதற்கு எத்தனையோ பல தொழில்நுட்பம் இருந்த போதிலும் கவலையளிக்கின்றதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரதேசவாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் திருத்த வேலை காரணமாக கடந்த வியாழக்கிழமை [2020.03.12] காலை 5.00am மணி தொடக்கம் இரவு 6.00pm வரை பல பிரதேசங்களில் நீர்த்துண்டிக்கப்பட்டு திருத்த வேலைகள் நடைபெற்றது, இவ்வாறான நிலையில் அதே இடத்தில் மீண்டும் 2020.03.17 தொடக்கம் 2020.03.20 ஆந் திகதி தற்போதும் திருத்த வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதே இடத்தில் இதற்கு முன்னரும் பல தடவை திருத்த வேலைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் நாட்டில் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண சூழ் நிலையில் மக்கள் அல்லுரும் நிலையில் குடிநீர் விநியோகம் துண்டிப்பால் பிரதேச மக்கள், நீரின்றி பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் , குடிப்பதற்கும் குடிநீர் இன்றி சிறுவர்கள் உட்பட அனைவரும் பாதிப்படைந்து உள்ளனர்.

குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீர் செய்து தருமாறு திருகோணமலை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் உட்பட சம்மந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நன்றி திருமலை சர்ஜுன்
Powered by Blogger.