சுகாதார பரிசோதகரின் அதிரடி நடவடிக்கை
(கிண்ணியா முனீஸ்)
இன்று(12.04.2020) நான்கு டிப்பர் வாகனங்கள் மூலம் தனியார் தொழிற்சாலையின் கழிவுகள் கிண்ணியா பிரதேச சபையின் முறைப்படி அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் அரை ஏக்கர் கிராமத்தில் கொட்டப்பட்ட போது சுகாதார வைத்திய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையினால் தடை செய்யப்பட்டதோடு மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றதுமேலும் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுவரவே ஆயிரம் தடவை யோசிக்கின்ற இவ்வேளையிலே கழிவுப் பொருளை கொண்டுவர அதுவும் ஊரடங்கு வேளையிலே அனுமதி வழங்கியமை கவலையளிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
