பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா தொற்றுடைய நபர்களுடன் நெருங்கிப் பழகிய 15 பேர் இன்று (19) வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரத் தன்மை குறைவடைந்து வந்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.