Header Ads

Breaking News
recent

வெளி​நாட்​டுத் தொழி​லா​ளர்​க​ளின் எண்​ணிக்​கையை குறைப்பதற்கு தீர்மானம்!


குவைத்​தில் வெளி​நாட்​டுத் தொழி​லா​ளர்​க​ளின் எண்​ணிக்​கையை குறைக்கும் வகையிலான குடி​யேற்ற யோசனைக்கு அந்த நாட்டு நாடா​ளு​மன்​றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

குவைட்டில் சுமார் 43 லட்சம் மக்கள் தொகை காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 30 லட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை​யில் சரிவு மற்றும் கொரோனா நோய்த்​தொற்று கார​ண​மாக, குவைத்​தில் வாழும் வெளி​நாட்​டி​ன​ருக்கு எதிர்ப்பு எழுந்​த​தை​ய​டுத்து, வெளி​நாட்​ட​வர் எண்​ணிக்​கையை 70 சத​வீ​தத்​தி​லி​ருந்து 30 சத​வீ​த​மாக குறைக்​கும் திட்டத்தை பிர​த​மர் ஷேக் ஷபா அல் காலித் கடந்த மாதம் முன்​மொ​ழிந்​தார்.

இந்த நிலையிலேயே, குறித்த யோசனைக்கு அந்த நாட்டு நாடா​ளு​மன்​றக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.