Header Ads

Breaking News
recent

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அரையாண்டு கால சட்ட நடவடிக்கைகள்...


யாழ். மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 373 வழக்குகள் அதிகாரசபையினால் பதியப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரியும் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அப்துல் லத்தீப் ஜஃபர் ஸாதிக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் "இவ் வழக்குகள் காலாவதி, விலைப்பட்டியலின்மை, உத்தரவாதமின்மை, இறக்குமதி விபரமின்மை, SLS தரச்சான்றுதலின்மை, கட்டுப்பாட்டு விலையினைமீறியமை, பொறிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பான காரணங்களுக்காக பதியப்பட்டன" என்று தெரிவித்தார்.

"இவ் அரையாண்டு காலப்பகுதியில் யாழ். மாவட்ட எல்லைக்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் ஜனவரி மாதம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 வழக்குகளுக்கு ரூபா 497000 தண்டப்பணமாக கிடைக்கப்பெற்றது. பெப்ரவரி மாதம் 69 வழக்குகளுக்கு பதிவு செய்யப்பட்டு 78 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 357000 கிடைக்கப்பெற்றது. மார்ச் மாதம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 164500 கிடைக்கப்பெற்றது. ஏப்ரல், மே மாதங்களில் கொவிட் 19 காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்படாததோடு, யூன் மாதம் 92 வழக்குகள்பதிவு செய்யப்பட்டு 84 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 418000 கிடைக்கப்பெற்றது. மொத்தமாக அரையாண்டு காலப்பகுதியில் 318வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 307 வழக்குகள் நிறைவு பெற்று தண்டப்பணமாக ரூபா 1436500 கிடைக்கப்பெற்றது" எனவும் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.