யானை தாக்கியதில் ஒருவர் வைத்திய சாலையில் பரிதாபம்
கெப்பித்திகொல்லாவ அல்லவெவ கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் இன்று யானை தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வவுனியா பொது வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
A.C.பத்தாஹ் என்ற குடும்பஸ்தரே யானை தாக்குதலுக்காக இலக்காகியுள்ளார்
இன்று மாலை 5:00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இப்பகுதியில் அண்மையிலும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
