இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு Covid19 கொரோனா தொற்று உறுதி!!!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பிரிவில் பணியாற்றும் சுமார் 35 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
