தற்காலிகமாக மூடப்பட்ட பள்ளிகளை மீள திறப்பது தொடர்பான தீர்மானம்!!!
கிண்ணியா பிரதேசத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட பள்ளிகளை மீள திறப்பது தொடர்பான கலந்துரையாடல் (03) நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர்கள் மாத்திரம் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பு : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம். இருப்பினும் இக் கூட்ட தீர்மானங்கள் தங்களுக்கு அறிவிக்கப்படும்.
அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம்
உலமா சபை - கிண்ணியா