30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் : கரைத்தீவு முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில்

புத்தளம் வண்ணாத்திவில்லு, கரைத்தீவு பிரதேசத்தில் கரைத்தீவு முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை காலை 8.00மணிமுதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
முதல்கட்ட பணியாக பௌத்த மதகுருமார்கள் ஏற்றியுள்ளார். 30 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் கலந்து கெள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு இன்று பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெற உள்ளது.




