மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு : திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி...
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு ஒன்றுஇடம்பொற்றது
இன்று (16) காலை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பிரதான கோட்போர் கூடத்தில் கல்லூரியில் முதல்வர் அருட்பணி அல்பிரட் விஜயகமலன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இன் நிகழ்வில் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் 14 மாணவர்களுக்கும், இடைநிலைபிரிவில் 28 மாணவர்களுக்கும் இவ்வாறு மாணவர் தலைவர்களாக சின்னம் சூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவயோகீஸ்வர சர்மா, கௌரவ அதிதியாக
பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கிளமன்ஸ் இமானுவல் கலந்து சிறப்பித்ததுடன் கல்லூரியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்மை குறிப்பிடத்தக்கது.