திருமலையில் நாளை சமையல் எரிவாயு வினியோகிக்கப்படும் இடங்கள் - 02.06.2022
திருகோணமலை மாவட்டத்தில் நாளையதினம் (02) லிட்ரோ நிறுவனத்தினால் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 12. 50 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூதூர் பிரதேசத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது.
வாடிக்கையாளர்கள் தேவையற்ற விதத்தில் சமையல் எரிவாயு முகவர் நிலையங்களிலோ சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கலோ நீன்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் மூதூர் பிரதேசத்தில் நாளைய தினம் 400 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


