கடலில் மூழ்கிய தாய், மகன் உட்பட மூவரை தேடும் நடவடிக்ககை தீவிரம்!
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடற்கரைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் சகோதரியின் மகன் என மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அம்பலாந்தோட்டை வெலிபடன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குடும்பத்தினர் அங்கிருந்து கடற்கரைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
(55 வயதுடைய தாயார்) மற்றும் அவரது (16 வயதுடைய) மகன் இவர்களுடன் சென்ற சகோதரியின் மகனும் (22 வயதுடையவர்) என மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...
